20/04/2024
இன்றைய பாடம்
ஒரு நாள், சிங்கம் மிகுந்த பசியுடன் நரியிடம் சொன்னது:
"எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா, இல்லையென்றால் நான் உன்னை சாப்பிடுவேன்"
நரி ஒரு கழுதையிடம் சென்று, "உனக்கு நல்ல காலம் துவங்கிவிட்டது, சிங்கம் உன்னை அரசனாக்க விரும்புகிறது, என்னுடன் வா?" என்றது.
கழுதையும் ஆசையுடன் நரியுடன் சென்றது.
கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனை தாக்கியது, கழுதையின் காதுகளை கடித்து துண்டித்தது, ஆனால் கழுதை தப்பித்துவிட்டது.
கழுதை நரியிடம் கோபமாக சொன்னது: "சிங்கம் என்னைக் கொல்ல பார்த்தது, என்னை ஏன் ஏமாற்றினீர்கள்? "
நரி சொன்னது: "முட்டாள்தனமாக உளறாதே, கிரீடத்தை உன் தலையில் வைப்பதற்காகவே, இடைஞ்சலாக இருந்த உன் காதுகளை சிங்கம் துண்டித்தது, வா திரும்பிப் போகலாம்"
கழுதைக்கு அது சரி என்று பட்டதால் அது மறுபடி நரியுடன் சென்றது.
மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை கடித்து அறுத்தது! கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: "நீ பொய் சொல்கிறாய், பார் சிங்கம் என்னை கொல்ல வந்தது, நான் தப்பித்தேன், ஆனால் ஏன் வாலை இழந்தேன்.
நரி சொன்னது: "அவர் உங்கள் வாலை ஏன் அகற்றினார் புரியவில்லையா? இனிமேல் நீங்கள் சிம்மாசனத்தில் வசதியாக உட்காரலாம், சிங்கம் உனக்கு நல்லது தான் செய்கிறது, என்னுடன் திரும்பி வா போகலாம், "
நரி கழுதையை மீண்டும் சிங்கத்திடம் கூட்டி சென்றது.
இம்முறை கண் இமைக்கும் நேரத்தில், சிங்கம் கழுதையைப் பிடித்து அடித்துக் கொன்றது.
சிங்கம் நரியிடம் சொன்னது: "கழுதையை மீண்டும் கொண்டு வந்ததற்காக பாராட்டுகிறேன், இப்போது நீ போய், அதை எனக்காக தோலுரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை எனக்காக கொண்டு வா."
நரி கழுதையின் தோலை உரித்து முடித்து. ஆனால் நரிக்கும் பசித்தது. கழுதையின் மூளையை சாப்பிட்டு விட்டது, ஆனால் அதன் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: "கழுதையின் மூளை எங்கே?"
அதற்கு நரி பதிலளித்தது: "அதற்கு மூளை இல்லை ராஜா. அதற்கு மூளை இருந்திருந்தால், நீங்கள் அதன் காதையும் வாலையும் கடித்து துண்டித்த பிறகும், அது உங்களிடம் திரும்ப வந்திருக்குமா?"
சிங்கம் யோசித்து சொன்னது: "ஆமாம் நீ சொல்வதும் உண்மைதான்."
நண்பர்களே...
நயவஞ்சக கைக்கூலிகளிடம் கவனமாக இருங்கள்.
நட்பில்லாத நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.
தலையை எடுக்க துடிக்கும் தலைமையிடம் கவனமாக இருங்கள்.